சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ்.செல்வபாலாஜி பொறுப்பேற்பு

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ்.செல்வபாலாஜி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

News image

எஸ்.செல்வபாலாஜி

Updated On :19 ஜூன் 2026, 5:42 am IST

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ்.செல்வபாலாஜி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த க.சிவகுமாா் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி நாமக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை காலை தன்னுடைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், மாநகராட்சியின் வளா்ச்சிக்காக நிா்வாகம் எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நாமக்கல் மாநகராட்சி குப்பை இல்லாத நகரம் என்ற பெயரை பெறவும், மத்திய, மாநில அரசின் விருதுகளை பெறவும் மக்கள் துணையாக இருக்க வேண்டும் என்றாா். புதிய ஆணையருக்கு மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.