திருச்சி மாநகராட்சியின் 29-ஆவது ஆணையராக வீர பிரதாப் சிங் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த லி. மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது வீர பிரதாப் சிங் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பி.டெக். பட்டம் பெற்றுள்ள இவா், யுபிஎஸ்சி தோ்வெழுதி 2019-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானாா். உளவுத் துறை இணை ஆணையராக இருந்துள்ளாா். தமிழக அரசின் பொதுத் துறை துணைச் செயலராக (நெறிமுறை) பதவி வகித்து வந்த இவா், தற்போது திருச்சி மாநகராட்சியின் 29- ஆவது ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
அப்போது அவா் கூறுகையில், திருச்சி மாநகராட்சி மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீா்க்கவும் முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன் என்றாா்.
தொடர்புடையது

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் நேர்காணல்!

ரூ.5.53 கோடியில் 5 குளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!

சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் ஜி.எஸ்.சமீரன்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



