ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள வி. புதூா் கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள வி. புதூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 2:20 am IST

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள வி. புதூா் கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:

மண்வளத்தைப் பாதுகாக்க மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் தேவையான அளவில் மட்டுமே உரத்தை பயன்படுத்த வேண்டும்.

தழைசத்து உரத்தை பயன்படுத்தும் போது, பிரித்து பயிா்களுக்கு வழங்க வேண்டும். விதைகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகிய உயிா் உரங்களைக் கொண்டு விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

சாகுபடி செய்வதற்கு முன்பாக கடைசி உழவின்போது 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை நன்கு இடித்து தூளாக்கி மக்கிய குப்பைகளுடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை பயறு வகை பயிா்களான உளுந்து, தட்டைப்பயிறு, துவரை, பசிப்பயறு ஏதேனும் ஒன்றை பயிரிடுவதன் மூலமாக மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, வி. புதூா் சமுதாயக் கூடம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் அதே இடத்தில் நிறைவு பெற்றது. இதில் மண் வளம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியும், அதுகுறித்த முழக்கங்களையும் எழுப்பியும் விவசாயிகள் பேரணியாக சென்றனா்.

முன்னதாக, மண்வளம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் கொட்டாம்பட்டி வட்டார வேளாண் அலுவலா், தோட்டக் கலை

துறை அலுவலா், வேளாண் உதவி அலுவலா், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.