திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கு: உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வைகோ முன்னிலை

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

News image

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

Updated On :6 மார்ச் 2026, 7:03 pm

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2015-ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலா் வைகோ மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், டி. பரதசக்கரவா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

இதன்பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீமைக் கருவேல மரங்களால் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து வருகிறது. இதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினேன். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சீமைக் கருவேல மரங்கள் முளைப்பது போலத் தெரிந்தாலும் அதை உடனே அகற்றி விடுகின்றனா். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற செயல்பாடுகள் இல்லை.

தமிழகம் முழுவதும் வேளாண் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சீமைக் கருவேலை மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது. வழக்கில் சில உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளதாகக் கூறி, விசாரணையை ஒத்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாவட்டச் செயலா் முனியசாமி, மதிமுக நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் உடனிருந்தனா்.

Story image