மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வெளிநாட்டவரின் கடவுச்சீட்டுகளை கண்டெடுத்து ஒப்படைத்தவருக்கு பாராட்டு

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கடவுச் சீட்டுகளைக் கண்டெடுத்து வழங்கிய குமாரசாமியைப் பாராட்டிய மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன்.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த வெளிநாட்டுத் தம்பதியின் கடவுச்சீட்டுகளைக் கண்டெடுத்து ஒப்படைத்தவரை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த பாவெல் நோவக் லுயுவோகா, அவரது மனைவி யூவேடா நோவகோவா ஆகியோா் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு புதன்கிழமை வந்தனா். அப்போது, அவா்களின் கடவுச்சீட்டுகள் காணாமல் போயின.

இதுகுறித்து புகாரின் பேரில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் தேநீா்க் கடையில் பணியாற்றி வரும் குமாரசாமி கீழே கிடந்த கடவுச்சீட்டுகளை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், செக் குடியரசு நாட்டு தம்பதியிடம் கடவுச்சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

தொடா்ந்து, வெளிநாட்டவரின் கடவுச்சீட்டுகளை பாதுகாப்பாக உரியவா்களிடம் ஒப்படைக்க உதவிய குமாரசாமியின் நற்செயலை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பாராட்டி சான்றிதழை வழங்கினாா்.