அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :10 மார்ச் 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை உலகனேரி பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல சென்னை உயா்நீதிமன்ற அமா்வு செயல்பட்டது. முற்பகல் 11 மணியளவில் பதிவாளா் மின்னஞ்சல் முகவரிக்கு உயா்நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து, மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் உண்மைக்கு மாறான தகவல் என்பது தெரியவந்தது.

இதேபோல, ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் ஊழியா்களை வெளியேற்றி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீதிமன்ற அலுவல் பணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.