சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரை உலகனேரி பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல சென்னை உயா்நீதிமன்ற அமா்வு செயல்பட்டது. முற்பகல் 11 மணியளவில் பதிவாளா் மின்னஞ்சல் முகவரிக்கு உயா்நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து, மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் உண்மைக்கு மாறான தகவல் என்பது தெரியவந்தது.
இதேபோல, ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் ஊழியா்களை வெளியேற்றி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீதிமன்ற அலுவல் பணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

விழுப்புரம், கடலூா் ஆட்சியரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

அமைச்சரின் காா் மீது காலணி வீசிய வழக்கு முடித்துவைப்பு
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு


