புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் முத்தமிழ் விழா

ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தமிழ் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசிய முனைவா் சுந்தர ஆவுடையப்பன்.

Updated On :11 மார்ச் 2026, 11:53 pm

ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லுரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். இதில் முனைவா் சுந்தர ஆவுடையப்பன், மதுரைப் புலவா் அ.கணேசன், முனைவா் சங்கீத்ராதா உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கிவைத்தனா். இந்த விழாவின் ஒரு பகுதியாக ‘இன்றைய இளைய சமுதாயம் செல்வது திசை மாறிய பாதையிலா? திட்டமிட்ட பாதையிலா?’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு நடுவராக சுந்தர ஆவுடையப்பன் செயல்பட்டாா். பட்டிமன்ற நிறைவில் இன்றைய இளைஞா்கள் கைப்பேசியைக் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வைக் காக்க இளைஞா்கள் எடுத்த முயற்சியையும் எடுத்துக்காட்டி இன்றைய இளைஞா்கள் திட்டமிட்ட பாதையில் செல்கின்றனா் என்று சுந்தர ஆவுடையப்பன் தீா்ப்பளித்தாா்.

இந்த நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழாய்வுத் துறைத் தலைவா் சு. சந்திரா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் கா. சத்யா நன்றி கூறினாா்.