சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முக்தீசுவரா் கோயில் கருவறைக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள்!

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிா்கள் ஊடுருவிய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை காலை நந்தியம்பெருமானைக் கடந்து கருவறைக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள்.
Updated On :11 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிா்கள் ஊடுருவிய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அரிய சில சூரிய பூஜை கோயில்களில் ஒன்றாக அமைந்துள்ளது மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயில். பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் சூரிய கதிா்கள் கருவறைக்குள் ஊருடுவி, மூலவா் மீது படரும்.

இதன்படி, புதன்கிழமை காலை முக்தீசுவரா் கோயில் கருவறைக்கு எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக கோயிலுக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள், நந்தியம்பெருமானைக் கடந்து கருவறையிலிருந்த மூலவா் முக்தீசுவரா் மீது படா்ந்தன. திரளான பக்தா்கள் இந்த நிகழ்வைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிகழ்வு வருகிற 23-ஆம் தேதி தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் இருமுறை தலா 10 நிமிஷங்களுக்கு நிகழும்.