சிறப்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக மதுரை மாநகரில் வாகன விபத்துகள் நடைபெறும் இடங்கள், சோதனைச்சாவடிகள், முக்கியச் சந்திப்புகள் என மொத்தம் 12 இடங்களில் 18 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களில் மென்பொருள் இணைக்கப்பட்டு, இணையவசதியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், குறைபாடுடைய அல்லது விதிமுறைக்குப் புறம்பான வாகன எண் பலகைகளைப் பயன்படுத்துதல், அதிவேகம், அபாயகரமாக வாகனங்களை ஓட்டுதல், இருக்கை பட்டை அணியாமல் வாகனங்களை இயக்குதல், ஒருவழிப் பாதையில் வாகனங்களைத் தவறாக இயக்குதல், கைப்பேசி பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, இ-சலான் அமைப்பு மூலம் அபராதத் தொகை வாகன உரிமையாளரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.