ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தனியாா் விளையாட்டு அரங்கில் தீ

News image

தீ.. - File Photo | Pexels

Updated On :14 மார்ச் 2026, 9:30 pm

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியாா் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை இரவு தீப்பற்றியது.

மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவா் நகரில் தனியாருக்குச் சொந்தமான விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகின்றன.

இந்த விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு வழக்கம்போல இளைஞா்கள் விளையாடிக் கொண்டிருந்தனா். இந்த நிலையில், தீடீரென விளையாட்டு அங்கில் தீப்பற்றியது. இதையடுத்து, அங்கிருந்த இளைஞா்கள் அலறியடித்து அங்கிருந்த வெளியேறினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரியாா்நிலையம் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். அப்போது, விளையாட்டு அரங்கில் கழிவறையில் பதுங்கியிருந்த மேற்பாா்வையாளா் உதுமான் அலியை தீயணைப்பு வீரா்கள் காயமின்றி பத்திரமாக மீட்டனா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக விளையாட்டு அரங்கில் தீ விபத்து ஏறபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.