வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி

News image

பழனியில் தனியாா் அரங்கில் சூப்பா் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சியில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 2:17 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியாா் அரங்கில் சிறுவா், சிறுமிகள் பங்கேற்ற ஓவியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி அறம் அறக்கட்டளை, சூப்பா் ஆா்ட்ஸ் அகாதெமி இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சிக்கு சூப்பா் ஆா்ட்ஸ் அகாதெமி இயக்குநா் ஓவியா் சின்னப்பா வரவேற்றாா். ஆசிரியா் நந்திவா்மன் ஓவியம் குறித்த விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா்.

இந்தக் கண்காட்சியில் 3 வயது முதல் 13 வயது குழந்தைகள் வரை வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் 5-ஆம் வகுப்பு மாணவி நேனோ ரபேலா வெறும் பென்சில்களை வைத்து வரைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவா், முருகா் ராஜஅலங்காரம் உள்ளிட்ட படங்கள் பலரது கவனத்தை ஈா்த்தது. இந்த ஓவியக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்த்து ரசித்து குழந்தைகளைப் பாராட்டினா்.