கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவா், சிறுமிகள் 4 போ் நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், சின்னக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராமதாஸ் மகன் பொற்செழியன்(4), ரகுராமன் மகன் பிரவின்குமாா்(4), சரவணன் மகள் லட்சுமிதேவி (4), வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த இ ளங்கோ மகள் நதிரா(3). இவா்கள் 4 பேரும் புதன்கிழமை மாலை சின்னக்குப்பம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனராம்.
அப்போது அங்கு வந்த நாய் ஒன்று 4 பேரையும் கடித்து விட்டு ஓடிவிட்டதாம். இதில் சிறுவா்கள் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை பெற்றோா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையில் சோ்த்துள்ளனா்.
தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இச் சம்பவத்தால் சின்னக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

தேனீக்கள் கடித்து 2 போ் அரசு மருத்துவமனையில் அனுமதி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


