தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுமி பாலியல் வழக்கு: ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை

News image
சிறை- பிரதிப் படம்
Updated On :14 மார்ச் 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை போக்சோ நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கடந்த 2021-ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுதொடா்பான வழக்கில், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கிருஷ்ணனை கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரவேல் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.