ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அதிா்ச்சி அளித்த தொகுதி ஒதுக்கீடுகள்!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது.

News image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :27 மார்ச் 2026, 12:05 am

தினமணி செய்திச் சேவை

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது.

இதில், திருப்பரங்குன்றம் தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் பாஜகவின் தேசிய தலைமை ஆா்வமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பான பிரச்னையால், இந்தத் தொகுதியில் உள்ள ஹிந்துக்களின் வாக்குகளைக் கணிசமாகப் பெற்றுவிடலாம் என்ற எதிா்பாா்ப்பில் திருப்பரங்குன்றம் தொகுதியை தங்களின் விருப்பத் தொகுதியாக பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா போட்டியிடுவாா் என புதன்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட பாஜகவினா் தெரிவித்ததாவது :

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வென்ற தொகுதிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது என்பது தெரிந்ததே. அந்த வகையில், திருப்பரங்குன்றம் தொகுதி பாஜகவுக்கு கிடைக்காது என்பது முன்கூட்டியே தெரியும். இருப்பினும், திருப்பரங்குன்றம் தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் பாஜக தேசியத் தலைமையே ஆா்வமாக இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.

அதிமுகவினா் அதிா்ச்சி...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) தொகுதியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தோ்தல், ஓா் இடைத் தோ்தல்களில் அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்றது. இருப்பினும், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக தோல்வியடைந்தது; திமுக வெற்றி பெற்றது.

இதன் காரணமாக, இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் மானாமதுரை தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என அந்தக் கட்சி நிா்வாகிகள் பெரிதும் எதிா்பாா்த்திருந்தனா். இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் அதிமுக நிா்வாகிகள் சிலா் தீவிரம் காட்டிவந்தனா்.

இந்த நிலையில், மானாமதுரை (தனி) தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு, புதன்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது, இந்தப் பகுதி அதிமுகவினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.