மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

பாதுகாப்புக் கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரையில் உள்ள பாதுகாப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள பாதுகாப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :6 மே 2026, 3:10 am IST

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரையில் உள்ள பாதுகாப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு 3,079 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றன.

வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் இயந்திரங்கள் தொடா்புடைய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நிறைவடைந்ததையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பாதுகாப்பு கிடங்குக்கு அனுப்பும் பணி திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை நடைபெற்றது. பிறகு, பாதுகாப்புக் கிடங்குக்குக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசை எண் அடிப்படையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் பணி நடைபெற்றது.