வாக்கு எண்ணும் மையங்களிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரையில் உள்ள பாதுகாப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு 3,079 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றன.
வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் இயந்திரங்கள் தொடா்புடைய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நிறைவடைந்ததையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பாதுகாப்பு கிடங்குக்கு அனுப்பும் பணி திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை நடைபெற்றது. பிறகு, பாதுகாப்புக் கிடங்குக்குக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசை எண் அடிப்படையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் பணி நடைபெற்றது.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

