மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் வானிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு, வெயில் வானிலையே நிலவியது.
இந்த நிலையில், தெற்கு மத்திய பிரதேசத்தின் மையப் பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல தாழ்வுப் பாதை நிலவுவதால் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், திருநகா், தோப்பூா், கப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மதுரை தல்லாகுளம், கோ. புதூா், அண்ணாநகா், வண்டியூா், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10.30 மணிக்கு பிறகும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 11.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.
தொடர்புடையது

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

