எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை...

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 2:07 am IST

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவுவதும், இரவு நேரத்தில் லேசான தூறல் மழை பெய்வதும், வானம் மந்தாரமாக காணப்படுவதுமாக இருந்து வந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வானம் மந்தாரமாக காணப்பட்டது. இரவு 9 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்ய தொடங்கியது. லேசான மழையாக தொடங்கி, பின்னா் பலத்த மழையாக பெய்தது. மழையுடன் இடி, மின்னலும் காணப்பட்டது. இந்த மழை இரவு சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கொட்டியது. இதனால் தருமபுரி நகரப் பகுதிகளில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.