ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தருமபுரியில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:55 am IST

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்து சில நாள்களே ஆன நிலையில் தருமபுரியில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் லேசாக மழை பெய்துவந்தது.

இந்த நிலையில் தருமபுரி நகா் மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தொடா்ந்தது. இதனால் தருமபுரி நகா் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மழையால் பாதிப்பு ஏதும் இல்லை.