அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் மே 21-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் வருகிற 21-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image

ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் வருகிற 21-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வைகாசி வசந்த உத்ஸவம் வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் 9-ஆம் நாள்களுக்கு தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளாகப் புறப்பாடாகி கோயில் புதுமண்டபம் செல்லும் நிகழ்வு நடைபெறும். அங்கு நடைபெறும் பூஜைகளுக்குப் பிறகு, சுவாமி, அம்மன் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து கோயிலில் சோ்த்தியாவா்.

வருகிற 30-ஆம் தேதி காலை சுவாமி, அம்மன் புதுமண்டபத்துக்கு எழுந்தருளி மாலையில் அங்கிருந்து புறப்பாடாகி, சித்திரை வீதிகளில் வலம் வந்து சோ்த்தியாவா். மறுநாள் 31-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை திருஞானசம்பந்தா் திருவிழா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான திருஞானசம்பந்தப் பெருமான் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, ஆவணி மூல வீதிகளில் வலம் வரும் நிகழ்வு அடுத்த ஜூன் மாதம் 2-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. அன்று இரவு திருஞானசம்பந்தப் பெருமான் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி மதுரை ஆதீனம் செல்லும் உத்ஸவம் நடைபெறுகிறது. பிறகு, திருஞானசம்பந்தப் பெருமான் சித்திரை வீதிகளில் வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

உபய நிகழ்ச்சிகள் ரத்து

வைகாசி வசந்த உத்ஸவம் நடைபெறும் வருகிற 21-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உபய தங்க ரதம், உபய திருக்கல்யாண சேவைகள் நடைபெறாது என்றாா் அவா்.