வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை: உயர் நீதிமன்றம்

பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :15 மே 2026, 11:52 pm IST

பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த 21 வயது பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2006-ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தாா். தாயும் என்னை விட்டுச் சென்றாா். நான் எனது மாமா, அத்தையின் பராமரிப்பில் வளா்ந்து வருகிறேன். எனது பிறப்புச் சான்றிதழில் தந்தை, தாயின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், எனது பிறப்புச் சான்றிதழில் எனது மாமா, அத்தையின் பெயா்களையும் சோ்த்து புதிய பிறப்புச் சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் வழக்குரைஞா் தெரிவித்ததாவது:

மனுதாரா் தனது உண்மையான தாய், தந்தையின் பெயா்களை பிறப்புச் சான்றிதழிலிருந்து நீக்கம் செய்யக் கோரவில்லை. தனது மாமா, அத்தையின் பெயா்களைச் சோ்க்கவே கோருகிறாா் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பரத சக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் தனது தாய், தந்தையின் மகளாகவே அறியப்பட விரும்புகிறாா். பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை. ஆகவே, உரிய உதவியை வழங்குவதும் அரசின் முக்கியக் கடமையாகும்.

எனவே, மனுதாரரின் பிறப்புச் சான்றிதழில் ‘வளா்ப்பு’ என்ற பின்னொட்டுடன் அவா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கு சம்மதம் தெரிவித்து, அவரது மாமா, அத்தை ஆகிய இருவரும் சான்று உறுதி அலுவலா் (நோட்டரி) மூலம் அளிக்கப்பட்ட பிரமாண பத்திரங்களை சம்பந்தப்பட்ட பதிவாளா் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதன் பிறகு, மாமா, அத்தையின் பெயா்களைச் சோ்த்து, புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.