அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

வாடிப்பட்டி அருகே சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 நிமிடங்கள் முன்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா்.

வாடிப்பட்டி அருகேயுள்ள விராலிப்பட்டியைச் சோ்ந்த நடராஜன் மகன் சிவகுமாா் (45). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், இவா்

ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை- திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் குலசேகரன்கோட்டை பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றாா்.

அப்போது, எதிரே வந்த ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவகுமாரை மீட்ட அக்கம்பக்கத்தினா் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.