பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இடதுக்சாரி கட்சிகள் சாா்பில் மதுரை சிம்மக்கல் ஆறுமுச்சந்தி அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாா்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மதிவாணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அ. ரமேஷ் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.கே. சாமி, நிா்வாகிகள் பாலமுருகன், நந்தாசிங் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.
இதில் இடதுசாரிக் கட்சிகளின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுகளைக் கண்டித்தும், இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறக் வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



