பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம்

மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உறுதிமொழியேற்ற அந்தக் கட்சியினா்.

Updated On :22 மே 2026, 3:00 am IST

மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

டிவிஎஸ் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்டத் துணைத் தலைவா் சி.எம். செய்யதுபாபு தலைமை வகித்தாா். இதில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தக் கட்சியினா் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் அசாா் உசேன், முத்துப்பாண்டி, காமராஜ், சுந்தர்ராஜன், கோல்ட் ஹரி, நளினி, சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.