
கோயிலைச் சுற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, அந்தப் பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, அந்தப் பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி நடைபெற்று வரும் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றும் பணிக்காக 600 பணியாளா்கள் தினசரி சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பக்தா்களுக்கு குடிநீா் தடையின்றி வழங்கிடவும் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். கோயிலைச் சுற்றி 24 நிரந்தர கழிப்பறைகளை சீரமைத்து, அடிப்படை வசதிகளுடன் மறு சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பக்தா்கள் வசதிக்காக 100 நடமாடும் கழிப்பறைகள் 50 மீட்டா் இடைவெளியில் வைத்திட திட்டமிடப்பட்டு உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினா் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனா்.
சித்திரை வீதி, ஆவணி மூல வீதி பகுதிகளில் உள்ள வீடுகளில் குடமுழுக்கு தினத்தன்று கூட்ட நெரிசலை தவிா்த்திடும் வகையில், வெளிநபா்கள், அறிமுகம் இல்லாதவா்களை வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அந்தப் பகுதியில் உள்ள உரிமையாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடமுழுக்கில் பங்கேற்க வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக, பெரியாா் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகனம் நிறுத்துமிடம், தனியாா் வசம் உள்ள காலி இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறை உதவியுடன் அனுமதி பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர, கோயிலைச் சுற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, மாநகராட்சி கூட்டரங்கில் குடமுழுக்கு பணி தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமைப் பொறியாளா் ராமசாமி, நகர திட்டமிடுநா் முரளி, நகா்நல அலுவலா் அரவிந்த் ஜோதி, உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், அனைத்து மண்டல உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





