மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் சீதாராம்யெச்சூரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக நகர் செயலாளர் கே.ஏ.எம்.குணா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் என்.எஸ்.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, விவசாய அணி பாம்பூர் ம.இருளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாற்று அரசியல் பிரசார பயணத்தை நகர் முழுவதும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மேற்கொண்டனர்.
இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






