கமுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கமுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கழிவு நீர் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
Updated on
1 min read

கமுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கழிவு நீர் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகபொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யகுண்டாறு குடிநீர் திட்டத்தின் கீழ் கமுதி குண்டாற்றில் ஆழ்துளைக்கிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ராட்சத மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு கமுதியில் உள்ள 15 வார்டு பொதுமக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ராஜகம்பீரம் குடநீர் திட்டத்தின் மூலமும் கமுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து முத்துமாரி நகர் பெரியபள்ளிவாசல் செல்லும்சாலை சந்திப்பில் கடந்த 1 வார காலமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணணீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் முழுமையாக குடிநீர்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.குழாய்உடைப்புகளை சரிசெய்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com