ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்னம் அருகே சம்பை கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
புதன்கிழமை இச்சம்பவம் தெரியவந்ததும், அக்கோயில் அறங்காவலரான கார்மேகம் மனைவி நாகேஸ்வரி(52) தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் உண்டியலில் ரூ.52 ஆயிரம் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.