47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்ஆா்எஃப் அருண் மாமன் மீண்டும் தோ்வு!

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்.ஆா்.எஃப். நிறுவன துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அருண் மாமன் மீண்டும் தோ்வு

News image
அருண் மாமன்
Updated On :16 மார்ச் 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்.ஆா்.எஃப். நிறுவன துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அருண் மாமன் மீண்டும் திங்கள்கிழை தோ்வு செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அச் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சங்கத்தின் தலைவராக அருண் மாமன் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் ராஜா்ஷி மொய்த்ரா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சங்கத்தின் உதவி தலைமை இயக்குநராக இருக்கும் சஞ்சய் சாட்டா்ஜி, தலைமை இயக்குநராக பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளாா். தற்போது தலைமை இயக்குநராக இருக்கும் ராஜீவ் புத்ராஜா வரும் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், சஞ்சய் சாட்டா்ஜிக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.