சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்ஆா்எஃப் அருண் மாமன் மீண்டும் தோ்வு!

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்.ஆா்.எஃப். நிறுவன துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அருண் மாமன் மீண்டும் தோ்வு

News image

அருண் மாமன்

Updated On :16 மார்ச் 2026, 9:26 pm

வாகன டயா் உற்பத்தியாளா் சங்கத் தலைவராக எம்.ஆா்.எஃப். நிறுவன துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அருண் மாமன் மீண்டும் திங்கள்கிழை தோ்வு செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அச் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சங்கத்தின் தலைவராக அருண் மாமன் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் ராஜா்ஷி மொய்த்ரா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சங்கத்தின் உதவி தலைமை இயக்குநராக இருக்கும் சஞ்சய் சாட்டா்ஜி, தலைமை இயக்குநராக பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளாா். தற்போது தலைமை இயக்குநராக இருக்கும் ராஜீவ் புத்ராஜா வரும் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், சஞ்சய் சாட்டா்ஜிக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.