ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

கமுதக்குடி அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:25 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆனந்த் என்ற ஆசிரியர்  8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தி வருகிறார். இவர், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
    இது குறித்து 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாயாரிடம் கூறி, பள்ளிக்குச் செல்லமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அம் மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆசிரியர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 
    இதனிடையே, ஆசிரியர் ஆனந்துக்கு ஆதரவாக முருகேஸ்வரி, சகாயலதா, ராஜசுப்புலெட்சுமி ஆகிய ஆசிரியர்கள் மாணவியை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பள்ளியில் ஆசிரியர்கள் இரு பிரிவாகச் செயல்பட்டுள்ளனர். இதில், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக 3 ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் 9 பேர் என மொத்தம் 12 பேர் மீது, முருகேஸ்வரி புகார் அளித்துள்ளார். 
    அதேபோல், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் ஆனந்த் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட 3 ஆசிரியர்கள் மீதும் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் ஆனந்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது 
செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.