நயினார்கோவில் அருகே உள்ள நகரம் கிராமத்தில், உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறில் முதியவரை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நயினார்கோவில் ஒன்றியம் நகரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் துரைராஜ் (57). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சுரேஷ் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில், சுரேஷ் மற்றும் குமார் மனைவி சங்கீதா ஆகியோர் இரும்பு கம்பியால் துரைராஜை தாக்கியுள்ளனர். இதில், அவர் பலத்த காயமுற்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் துரைராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸார் சுரேஷ், சங்கீதா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


