ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் நிலக்கடலை சாகுபடிக்கு விதைப்பண்ணைகள் அமைப்பு: அதிகாரி தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரும் நிலக்கடலை சாகுபடி செய்வதற்காக முதல் முறையாக விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:34 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரும் நிலக்கடலை சாகுபடி செய்வதற்காக முதல் முறையாக விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது என விதைச்சான்று உதவி இயக்குநர் எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே முடுக்குத்தரவை கிராமத்தில் பாலு என்ற விவசாயி வயலில் தரணி ரக நிலக்கடலை சாகுபடி செய்வதற்கான விதைப்பண்ணைகளை வியாழக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியது:  ஹைதராபாத்தில் இயங்கும் மானாவாரி பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட தரணி என்ற நிலக்கடலை ரகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதக்குடி, முஷ்டக்குறிச்சி, வல்லந்தை, அரசரடி வண்டல், முடுக்குத்தரவை, தினைக்குளம், கீரிப்பூர் வலசை ஆகிய கிராமங்களில் முதல் முறையாக விதைப்பண்ணைகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக நிலக்கடலை வறட்சியை தாங்கி 110 நாள்களில் அதிக மகசூல் தரக்கூடியது.
 தேசிய எண்ணெய் வித்துப்பயிர்கள் மற்றும் எண்ணெய் பனை இயக்கம் திட்டத்தின் கீழ் உற்பத்தி மானியமாக கிலோவிற்கு ரூ.10-ம், விநியோக மானியமாக கிலோவுக்கு ரூ.25 மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ் விநியோக மானியமாக 50 சதவிகிதத்திலும் வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலையில் 51 ஹெக்டேர் பரப்பளவில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு 50 மெ.டன் சான்று பெற்ற நிலக்கடலை கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.விதைப் பண்ணைக்குத் தேவையான ஆதார விதைகள் கொள்முதல் செய்யும் பணிகள் வேளாண்மைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் பொதுவாக திண்டிவனம் 7 ரக நிலக்கடலை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் அதிக எண்ணெய் சதவிகிதம் கொண்ட திண்டிவனம் 13, காதிரி 6,  தரணி போன்ற புதிய ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான சான்று விதைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலக்கடலையில் பொக்குகள் இன்றி நன்கு வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு நிலக்கடலை பயிரில் ஊட்டச்சத்து கலவையை தெளிப்பது அவசியம் என்றார். அப்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ப.ராஜா, திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.