அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தமிழகத்தில் முன்னோடி மையமாக தேவிப்பட்டினம் சத்துணவுக் கூடம் தேர்வு: ஜெயலலிதாவின் நிதியுதவியில் கட்டப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தாயார் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் ஏற்படுத்திய அன்னை சந்தியா நினைவு

Updated On :14 ஜூலை 2018, 1:33 am IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தாயார் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் ஏற்படுத்திய அன்னை சந்தியா நினைவு சத்துணவு மையம், மாநில அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தனியார் மழலையர் பள்ளிகளையும் விஞ்சும் வகையில் இங்கு ஸ்மார்ட் போர்டு வகுப்பறை, புரொஜக்டர் கருவி, கல்விக்கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த சத்துணவு மையம் தமிழக அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்டத் திட்ட அலுவலர் பி.கிருஷ்ணவேணி கூறியதாவது: தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவாளநல்லூர் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பிறந்த ஊர் என சொல்லப்படுகிறது. எனவே, இங்கு ஜெயலலிதா தனது தாயார் நினைவாக, சொந்த நிதி ரூ.50 ஆயிரத்தை அளித்து, அன்னை சந்தியா நினைவு சத்துணவுக் கூடத்தை 1984-இல் ஏற்படுத்தினார். இம்மையம்  தமிழகத்தில் உள்ள 56 ஆயிரம் சத்துணவு மையங்களில், முன்னோடி சத்துணவு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.