முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தாயார் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் ஏற்படுத்திய அன்னை சந்தியா நினைவு சத்துணவு மையம், மாநில அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தனியார் மழலையர் பள்ளிகளையும் விஞ்சும் வகையில் இங்கு ஸ்மார்ட் போர்டு வகுப்பறை, புரொஜக்டர் கருவி, கல்விக்கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த சத்துணவு மையம் தமிழக அளவில் முன்னோடி சத்துணவு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்டத் திட்ட அலுவலர் பி.கிருஷ்ணவேணி கூறியதாவது: தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவாளநல்லூர் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பிறந்த ஊர் என சொல்லப்படுகிறது. எனவே, இங்கு ஜெயலலிதா தனது தாயார் நினைவாக, சொந்த நிதி ரூ.50 ஆயிரத்தை அளித்து, அன்னை சந்தியா நினைவு சத்துணவுக் கூடத்தை 1984-இல் ஏற்படுத்தினார். இம்மையம் தமிழகத்தில் உள்ள 56 ஆயிரம் சத்துணவு மையங்களில், முன்னோடி சத்துணவு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அழிவு நிலைக்கு செல்லும் காங்கிரஸ்: டி.கே.எஸ். இளங்கோவன்

தேர்தலுக்கு முன் வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்: சேரன்

வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ்

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!
வீடியோக்கள்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

