மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்
ராமேசுவரம், மார்ச் 29: உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயிலை வியாழக்கிழமை மறிக்க சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள காவிரி நீரை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-ஆம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரிய அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,
இதனை கண்டித்து, ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ராமேசுவரம் வரும் திருச்சி ரயிலை மறிக்கச் சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மாவட்ட செயலாளர் குருசர்மா, நகர பொதுச்செயலாளர் நம்புகார்த்திக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

