கமுதி பகுதியில் விவசாயத்திற்காக அமைக்கபட்ட பண்ணைக் குட்டைகள் மண் மேடாகி உருக்குலைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கமுதி பகுதிகளில் தரிசு, புறம்போக்கு நிலங்களிலிருந்து வீணாகும் மழை நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் விவசாய நிலங்களுக்கு அருகே 30 மீட்டர் நீள, அகலம் கொண்ட பண்ணை குட்டைகள் அரசு மானியத்தில் அமைக்கபட்டன. சிறிதளவு மழை நீரைக்கூட சேமித்து, மகசூல் காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி மகசூல் பெறலாம் என விவசாயிகளும் ஆர்வத்துடன் பண்ணைக்குட்டைகளை அமைத்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மழை இல்லாததால், பண்ணைக் குட்டைகள் மண் மேடுகளாய் உருமாறி அழிந்து வருகின்றன. இதனால், விவசாயத்திற்கு போதிய தண்ணீரில்லாத நிலையில் விவசாயம் செய்ய முடியாமல் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோடை மழை ஆரம்பிக்கும் முன் விவசாய பண்ணை குட்டைகளை சீரமைக்க மானியம் அல்லது வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

