சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காக்கூர் கிராமத்தில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On :14 மே 2018, 6:25 pm

முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தில் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காக்கூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் குடிநீர் தொட்டி அருகே விடிய விடிய வரிசையில் நிற்கின்றனர். இதனால் பெண்கள் கூலி வேலைக்கும், வெளியூர்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. தண்ணீர் வராதபோது காலி குடங்களை வரிசையில் வைத்து இடம் பிடிக்கின்றனர்.
தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் வருகிறது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் இதே நிலை தான் உள்ளது. எனவே, காக்கூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.