தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ராமநாதபுரம் ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா: மே 20-இல் தொடக்கம்

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சௌபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

News image
Updated On :14 மே 2018, 6:25 pm

DIN

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சௌபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். வரும் 25 ஆம் தேதி அம்மன் தபசுக் கோலமும், 26 ஆம் தேதி சௌபாக்கியநாயகிக்கும், ஆதிரெத்தினேசுவரருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
27 ஆம் தேதி திருமணக் கோலத்தில் பட்டுப்பல்லக்கில் வீதியுலாவும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
28 ஆம் தேதி தேரோட்டமும், 29 ஆம் தேதி தீர்த்தவாரியுடனும் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன் தலைமையில் சபை நிர்வாகிகள், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார், விழாக்குழுத் தலைவர் எஸ்.என்.மனோகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.