சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ராமநாதபுரம் ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா: மே 20-இல் தொடக்கம்

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சௌபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

Updated On :14 மே 2018, 6:25 pm

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சௌபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். வரும் 25 ஆம் தேதி அம்மன் தபசுக் கோலமும், 26 ஆம் தேதி சௌபாக்கியநாயகிக்கும், ஆதிரெத்தினேசுவரருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
27 ஆம் தேதி திருமணக் கோலத்தில் பட்டுப்பல்லக்கில் வீதியுலாவும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
28 ஆம் தேதி தேரோட்டமும், 29 ஆம் தேதி தீர்த்தவாரியுடனும் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன் தலைமையில் சபை நிர்வாகிகள், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார், விழாக்குழுத் தலைவர் எஸ்.என்.மனோகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.