மணல் குவாரிகளை பாதுகாக்கவே, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை ஆற்றில் பாசனநீர் திறந்துவிடப்படவில்லை என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நகர் செயலர் என்.எஸ். பெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு, திமுக நகர் செயலர் சேது. கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பார்த்திபனூர் அருகே உள்ள சூடியூர் அரசு மணல் குவாரியை பாதுகாக்கவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை ஆற்றில் பாசன நீர் திறந்துவிடவில்லை. இதனைக் கண்டித்து செப்டம்பர் 19-ஆம் தேதி பரமக்குடி காந்தி சிலை முன்பிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மதிமுக பழ.சரவணன், தமாகா நகர் செயலர் டி.ஆர். கோதண்டராமன், பாஜக சுந்தர், வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலர் மு. மதுரைவீரன், மமக குயின்இப்ராஹிம், ஜனதாதளம் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

