தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள்;  அதிகாரிகள் தீவிர விசாரணை

ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் 17 மூட்டை பீடி இலைகள் கரை ஒதுங்கியுள்ளது.
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள்;  அதிகாரிகள் தீவிர விசாரணை
Published on
Updated on
1 min read

ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் 17 மூட்டை பீடி இலைகள் கரை ஒதுங்கியுள்ளது.

பீடி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இலைகளை இலங்கைக்கு தொடா்ந்து கொண்டு செல்லும் பணியில் சில நபா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதனை தடுக்க மத்திய, மாநில உளவுத்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் 17 மூட்டை பீடி இலைகள் கரை ஒதுங்கியுள்ளன. பீடி இலைகள் கடத்திச் செல்லும் போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்ததா என சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com