தேர்தலில் வெற்றி பெறவே அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: கொள்கைக்காக இல்லாமல், தேர்தலில் வெற்றி பெறவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. திமுக, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து இடைத்தேர்தலில் 21 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவை தோற்கடித்து, ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறது. அதனால் நாங்கள் எங்கள் ஆட்சியை தக்க வைக்கவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க அதிமுக என்றும் துணை நிற்கும். பாகிஸ்தான் மீது ஏற்கெனவே நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்போல், மீண்டும் ஒரு துல்லிய தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் மருந்து கடைகள் அடைப்பு: நோயாளிகள் அவதி

கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் விபத்தில் சிக்கி 21 போ் காயம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி

மாற்றம் ஏற்படுத்தும் மாற்றம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


