தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

கமுதி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்கள் மீது விசாரணை

Updated On :24 ஜனவரி 2019, 12:37 am IST

கமுதி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்படும் என, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார்.
    கமுதி அருகே வல்லந்தை, போத்த நதி, நாராயணபுரம் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள "ஸ்பிரிங்லெர்' மூலம் பாசன வசதி, சிறுதானிய செடிகள் வளர்ப்புக்கான "ஷேர்நெட்' அமைக்க மானியம் வழங்கப்பட்டுள்ள நிலம், வல்லந்தையில் 175 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சாப் விவசாயிகளின் பழப் பண்ணை குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 
     பஞ்சாப் விவசாயிகளின் முயற்சி மற்றும் வறட்சிப் பகுதியில் கமுதி விவசாயிகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளை, மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். 
   அப்போது அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு அதிக மழை இல்லாததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.   
    தோட்டக்கலை, விவசாயத் துறையின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கமுதி தோட்டக்கலைத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்களில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து மாற்றுத் துறையினரால் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்.  
  கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கமுதி குண்டாறு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தனியார் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து செங்கப்படை அதானி சோலார் தனியார் நிறுவனத்துக்கு மின் தகடுகள் கழுவ, குடிநீர் எடுத்துச் செல்லபடுவது குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வரும் மார்ச் மாதத்திலிருந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்புள்ளதால், கிராமங்களில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க டேங்கர்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.  
  அப்போது, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள், கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.