சாயல்குடியில் நகர் பா.ஜ.க. ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் நாகூர் பாண்டியன், நகர் பொருளாளர் செல்வராஜ், நகர் துணைத்தலைவர் மாரிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி மதுரைக்கு வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், பயிர்க்காப்பீடு விரைவில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிடப்பில் போட்டுள்ள சாயல்குடி போக்குவரத்து கழக கட்டுமானப் பணியை தொடங்கவும், நகர் பகுதியில் அரண்மனை தெரு சாலையை சீரமைக்கவும், தேவர் நகரில் புதிய சாலை அமைத்து வாறுகால் அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி சுந்தரமுருகன், தொகுதி பொறுப்பாளர் முருகேசன், கடலாடி மேற்கு ஒன்றியத் தலைவர் கோபாலகிருஷ்ணன், நகர் அணித் தலைவர் சுரேஷ்குமார், நகர் பிரசார பிரிவுத் தலைவர் சிவராஜா, சக்தி கேந்திர பொறுப்பாளர் மகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


