இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கமுதி அருகே குடிநீரின்றி கிராம மக்கள் அவதி

கமுதி அருகே  உள்ள கொல்லாங்குளத்தில் குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:04 am IST

கமுதி அருகே  உள்ள கொல்லாங்குளத்தில் குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கமுதி அருகே உள்ளது கொல்லங்குளம் கிராமம். இக்கிராமத்துக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. இங்கு சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகத்துக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 6 தரைத்தள தொட்டிகள் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. 
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக காவிரி குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களின் புழக்கத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்று வசதியுடன் கூடிய தொட்டியிலும் தண்ணீர் இல்லை. லட்சக்கணக்கில் அரசு நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் வெறும் காட்சிப் பொருளாக இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடையவைத்துள்ளது. தற்போது, கொல்லங்குளத்திலிருந்து கமுதி விலக்கு சாலைக்கு 2 கி.மீ. தூரம் பயணித்து  தண்ணீர் கொண்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் தலையிட்டு கொல்லங்குளத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.