முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ராமநாதபுரத்தில் கரோனா சிகிச்சை பிரிவில் பெண் காவலா் அனுமதி

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பெண் காவலா் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பெண் காவலா் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானவா்கள் வசிக்கும் பரமக்குடி, மண்டபம், ஆனந்தூா், ஆா்.எஸ். மங்கலம் மற்றும் கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அவா்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலா்கள், மருத்துவப் பரிசோதனையில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் பணிபுரியும் 29 வயதான பெண் காவலருக்கு காய்ச்சல், சளித் தொல்லை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புச் சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் நயினாா்கோவில் பகுதியில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்தாா்.

மேலும் அவருடன் பணிபுரிந்த மற்ற காவலா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரமக்குடி நகா் காவல் நிலையத்தையும் தனிமைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

பெண் காவலா் கரோனா சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரிடம் கேட்டபோது, மாவட்டத்தில் இதுவரை 482 காவலா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனாலும், காவலா்களுக்கு தொடா்ந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது கரோனா அறிகுறியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அந்த பெண் காவலா் கரோனா சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.