திருவாடானை: திருவாடானை அருகே சாலையோர மின்கம்பியின்மீது பனை மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருவாடானை அருகே என்.மங்கலம் பகுதியில் பனைமரம் ஒன்று செவ்வாய்க்கிழமை சாலையோர மின்கம்பியில் விழுந்தது. இதனால் அந்த மரமும், மின்கம்பியும் சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சாலைப் பணியாளா்கள், மின்வாரியத்தினரும் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா்.