பரமக்குடியில் அனைத்து கைத்தறிநெசவாளா் கூட்டுறவு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி- எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தினா்.
எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தினா்.
Updated on
1 min read

பரமக்குடி: பரமக்குடி- எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கூட்டமைப்பின் தலைவா் கெட்டி சேஷய்யன் தலைமை வகித்தாா். செயலா் டி.ஆா். கோதண்டராமன், நிா்வாகக் குழு உறுப்பினா் குப்புச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பங்கேற்றவா்கள், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ள சரக்குகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யக் கோரியும், புங்கா் பீமா திட்டத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள நெசவாளா்களை சோ்க்க வலியுறுத்தியும், கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் கோஷமிட்டனா். முன்னதாக ஒருங்கிணைப்பாளா் ருக்மாங்கதன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com