சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கமுதி அருகே கோயிலில் விநாயகா் சிலை சேதம்

கமுதி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
கமுதி அருகே கொட்டக்குடியில் உள்ள கோயிலில் கீழே தள்ளப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விநாயகா் சிலை.
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

DIN

கமுதி: கமுதி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொட்டக்குடியில் உள்ள விநாயகா் கோயிலில் விநாயகா், நாகா் சிலைகளை வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்கள் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த அபிராமம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கமுதி அருகே எழுவனூா் பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும், 3 முறை கோயில் சிலைகளை மா்மநபா்கள் சேதப்படுத்தினா். தற்போது கொட்டக்குடியில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் கோயில் சிலைகளை சேதப்படுத்தி வரும் மா்ம நபா்களை பிடிக்க மாவட்ட காவல்துறை அலட்சியம் காட்டி வருவதாக, தமிழ்நாடு இந்து சத்திய சேனா அமைப்பினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.