அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பானது 382.5 கோடி டாலர் அதிகரித்து, 70,094.6 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 9:45 pm IST

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பானது 382.5 கோடி டாலர் அதிகரித்து, 70,094.6 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 906.3 கோடி டாலர் அதிகரித்து, 69,712.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 72,849.4 கோடி டாலர் என்ற உச்சத்தை எட்டியது. ஆனால், மத்திய கிழக்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. இதனையடுத்து, ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் டாலர்களை விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்தது.

ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய இருப்பான, அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ), 312.7 கோடி டாலர் அதிகரித்து 55,598.3 கோடி டாலராக உயர்ந்ததாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு 601 மில்லியன் டாலர் அதிகரித்து, 12,134.3 கோடி டாலராக உயர்ந்ததாகவும், ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே வேளையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் கையிருப்பு 380.68 கோடி ரூபாய் அதிகரித்து, 485.7 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

Summary

India's forex reserves jumped USD 3.825 billion to USD 700.946 billion during the week ended April 10, says RBI.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.