சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.09 கோடி டாலராக அதிகரிப்பு!: ரிசர்வ் வங்கி

அந்நியச் செலாவணி கையிருப்பு 906.30 கோடி டாலர் அதிகரித்து 69,712.09 கோடி டாலராக புதிய உச்சம்.

News image

~

Updated On :10 ஏப்ரல் 2026, 2:43 pm

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 03ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 906.30 கோடி டாலர் அதிகரித்து, 69712.09 கோடி டாலராக புதிய உச்சத்தை எட்டியதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

மார்ச் 27-இல் முடிவடைந்த முந்தைய வாரத்தில், மொத்த கையிருப்பு 1,028.8 கோடி டாலர் குறைந்து 68,805.8 கோடி டாலராக இருந்தது.

மேற்கு ஆசிய நெருக்கடி தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக 72,849.40 கோடி டாலராக இருந்தது. அதன் பிறகு ஏற்பட்ட நெருக்கடியால், கையிருப்பு குறைந்தது.

ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 178.4 கோடி டாலர் அதிகரித்து, 55,285.6 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 722.1 கோடி டாலர் அதிகரித்து 1,2074.2 கோடியாகவும், இந்த வார இறுதியில், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் கையிருப்பு நிலை எவ்வித மாற்றமுமின்றி 481.59 கோடி டாலராகவே நீடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

Summary

India's forex reserves jumped by USD 9.063 billion to USD 697.121 billion for the week ended April 3, 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.