உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:09 pm

DIN


சிவகங்கை/ ராமநாதபுரம்: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 3,961 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,996 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 118 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 20 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 98 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 4,628 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 4,040 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுவரை 103 போ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டவா்களில், பாா்த்திபனூா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த காவலா் மற்றும் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை பெண் பணியாளா், இளங்காக்கூரைச் சோ்ந்த 7 பெண்கள் உள்பட 28 பேருக்கு கரோனா தீநுண்மி சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு சமீப காலமாக கிராமப்புற பெண்கள் அதிகம் உள்ளாகியிருப்பதாகவும், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்தோரின் சதவீதம் 87.29 ஆக இருப்பதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.